Show கவிதைப்பேழை > 3.6 பகுபத உறுப்புகள்சிறு வினாபகுபத உறுப்பிலக்கணம் கூறுக அ) வருகின்றாள் வருகின்றாள் = வா (வரு) + கின்று + ஆள்
ஆ) வாழ்வான் வாழ்வான் = வாழ் + வ் + ஆன்
இ) காண்பிப்பார் காண்பிப்பார் = காண்பி + ப் + ப் + ஆர்
ஈ) பிரிந்த பிரிந்த = பிரி + த்(ந்) + த் + அ
கூடுதல் வினாக்கள்குறுவினா1. பகுதி என்பதனை விளக்கு
3. விகுதி என்றால் என்ன?
3. இடைநிலை என்றால் என்ன? அதன் வகைகளை கூறு
4. சந்தி என்பதனை விளக்குக
5. சாரியை என்பதனை விளக்குக இடைநிலையும் விகுதியையும் பொருந்தச் (இயையச்) செய்வது, “சாரியை” என்னும் உறுப்பு அ, அன், கு என்பவை சாரியையாக வரும். பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் உயிர்மெய் எழுத்தும் சாரியை எனப்படும்
6. விகாரம் என்றால் என்ன? பகுபத உறுப்புகள் புணரும்போது ஏற்படும் எழுத்துகளின் வடிவமாற்றம் (திரிதல், கெடுதல், குறுகல்) விகாரம் எனப்படும். நினைவிற்கொள்க
இலக்கணத் தேர்ச்சிகொள்1. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை? பகுபத உறுப்புகள் ஆறு. அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகும் 2. காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துகாட்டுடன் விளக்குக? இறந்த காலம் காட்டும் இடைநிலைகள்
சான்று
நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்
சான்று
எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்
சான்று
3. பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்விடங்களில் அமையும்? சந்தி பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும், சிறுபான்மை இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் அமையும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் அமையும், சிறுபான்மை பகுதிக்கும், இடைநிலைக்கும் இடையில் அமையும் 4. விகுதிகள் எவற்றை உணர்ந்தும்? விகுதிகள், திணை (உயர்திணை, அஃறிணை) பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின்பால்), இடம் (தன்னிலை, முன்னிலை, படக்கை) ஆகியவற்றை உணர்த்தும். 5. பகுபத உறுப்பிலக்கணம் தருக
5. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை தேர்க
விடை : இன்- முறிந்தது 6. பின்வருவனவற்றுள் பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி சொற்களை உருவாக்குக
6. பின்வருவனவற்றுள் வேர்ச்சொல், எதிர்மறை இடைநிலை, விகுதி ஆகியவற்றை பயன்படுத்தி சொற்களை உருவாக்குக
மொழியை ஆள்வோம்சான்றோர் சித்திரம்தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படும் சி.வை.தாமோதரனார் இலங்கை யாா்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்து, தம் இருபதாவது வயதிலேயே “நீதிநெறி விளக்கம் என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியீட்டு, அறிஞர்களின் கவனத்தைக் கவரந்தார். 1868-ம் ஆண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும் பின்னர் கலித்தொகை, இறையனார் அகப்பொருள். வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களையும் செம்மையாக பதிப்புத்தும் புகழ்கொண்டார். அத்துடன் நில்லாழ, கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார், ஆறாம் வாசகப் புத்தகம் முதலிய பள்ளிப்பாடநூல்களையும் எழுதினார் அவருடைய தமிழ்பணியைக் கண்ட பெர்சிவல் பாரதியார். அவரைத் தாம் நடத்திய “தினவர்த்தமானி” என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார். அவ்வமயம் அவர் ஆங்கிலேயர் பலருக்கும் தமிழ் கற்றுத் தந்தார். அரசங்கத்தாரால், சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ் பண்டிதராக நியமிக்ப்பட்டார். பிறகு பி.எல். தேர்விலும் தேர்ச்சி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராக பணியாற்றி, 1884-ம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதுிபதியாக நியமிக்கப்பட்ட்டார். தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகப் கருதிப் கடமையாற்றினார். 1. மாநிலக்கல்லூரி – புணர்ச்சி விதி கூறுக மாநிலக்கல்லூரி – மாநிலக்கல்லூரி
2. ஆசிரியராக்கினார் – இதன் பகுதி
விடை : ஆசிரியராக்கு 3. சிறு சிறு தொடர்களாக மாற்றி எழுதுக தாமோதரனானர் நீதிநெறி விளக்கம் என்ற் நூலைப் பதிப்பித்து வெளியீட்டுக் கலித்தொகை, வீரசோழியம் உள்ளிட்ட நூல்களை பதிப்பித்து கட்டளைக் கலித்துறை, நட்சத்திரமாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
4. பெரும்புகழ் – இலக்கணக்குறிப்பு தருக பண்புத்தொகை 5. கல்லூரி, உயர்நீதிமன்றம், வரலாறு, பணி ஆகியவற்றிற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொற்களை எழுதுக
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக1. குமரனைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடு தான் குமரனது வீடு.
2. அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவேப் பெண்களும் அரசு பணியை பெற வேண்டும்.
3. கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவர்
4. தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
5. சான்றோர் மிகுந்தப் பொறுப்புடன் சிறப்பான சேவைப் புரிந்து கொள்கையை நிலைநாட்ட செய்தனர்
தமிழாக்கம் தருக1. Education is the most powerful weapon, which you can use to change the world.
2. Looking at beauty in the world is the first step of purifying the mind.
3. Culture does not make people; People make culture.
4. People without the knowledge of their past history and culture is like a tree without roots.
5. A nation’s culture resides in the hearts and in the soul of its people.
கலைச்சொல் அறிவோம்
அறிவை விரிவு செய்
சில பயனுள்ள பக்கங்கள்
|